Breaking News

ஈஸி இட்லி சாம்பார்



இந்த இட்லி சாம்பாரை எளிதில் செய்து விடலாம் ஏனெனில் பருப்பை வேக வைக்க தேவையில்லை. வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு உடனே செய்து அசத்தி விடலாம். எனவே நீங்களும் நான் கொடுத்துள்ள குறிப்பின்படி செய்து அசத்துங்க !!

 பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -

  1. துவரம்பருப்பு - 25 கிராம் 
  2. பாசிப்பருப்பு - 25 கிராம் 
  3. கடலைப்பருப்பு - 25 கிராம் 
  4. தக்காளி - 1
  5. பச்சை மிளகாய் - 1
  6. சின்ன வெங்காயம் - 4
  7. ஆச்சி சாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி 
  8. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி 
  9. காயத்தூள் - 1/4 தேக்கரண்டி 
  10. மல்லித்தழை - சிறிது 
  11. உப்பு - தேவையான அளவு
தாளிக்க -
  1. எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி 
  2. கடுகு - 1/2 தேக்கரண்டி 
  3. உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி 
  4. சின்ன வெங்காயம் - 4
  5. கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை -
  1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு நன்கு வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  2. ஆறிய பிறகு மிக்ஸ்சியில் திரித்துக் கொள்ளவும்.
  3. திரித்து வைத்துள்ள பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  4. தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கிலும் வெட்டி வைக்கவும்.
  5. அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் முழு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
  6. தக்காளி நன்கு வதங்கியதும் அதனுடன் ஆச்சி சாம்பார் பொடி, மஞ்சள் தூள், காயத்தூள் சேர்த்து கிளறவும். பிறகு உப்பு, 300 மில்லி தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
  7. பிறகு கலக்கி வைத்துள்ள பொடியை சேர்த்து மல்லித்தழையும் சேர்த்து அடுப்பை அணைக்கவும். பொடியை சேர்த்து கொதிக்க வைக்க கூடாது. பிறகு சாம்பாரை பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  9. வெங்காயம் பொன்னிறமானதும் எடுத்து குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி விடவும். சுவையான இட்லி சாம்பார் ரெடி.
குறிப்புகள் -
  1. மூன்று வகையான பருப்புகளை சம அளவு எடுத்து வறுத்து மிக்ஸ்சியில் திரித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.

கருத்துகள் இல்லை